மணிப்பூரக சக்கரா தியானம்.
நிமிர்ந்து அமரவும். தரையில் விரிப்பு விரித்து அதில் காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் மேற்கு திசை நோக்கியும் அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும், இவ்வாறு 10 முறை செய்யவும்.
பின் உங்களது மூச்சு ஓட்டத்தை வயிற்றுப்பகுதியில் நிலை நிறுத்தவும். வயிற்றுப்பகுதியில் கூர்ந்து தியானிக்கவும். நல்ல பிராண சக்தி வயிற்று உள் உறுப்புகளில் கிடைப்பதாக மனதில் நினைக்கவும்.இவ்வாறு ஐந்து நிமிடங்கள் காலை மாலை தியானிக்கவும்.
பய உணர்வால் பிராண சக்தி உடல் முழுவதும் சரியாக செல்லாமல் இருக்கும். இந்த மணிப்பூரக சக்கரம் தியானத்தால் பிராண ஆற்றல் உடல் முழுக்க நன்கு இயங்கும் மனோ பயம் நீங்கும், மன தைரியம் கிடைக்கும், இதயத் துடிப்பு சீராகும், உடல் முழுக்க எந்தப் பகுதியில் சக்தி ஓட்டம் குறைவாக இருந்தாலும் மணிப்பூரக சக்கரா தியானம் தொடர்ந்து ஐந்து நிமிட தியானம் செய்தாலே உடல் இயக்கம் மனோஇயக்கம் மிகச்சிறப்பாக இருக்கும்.
எனவே தினமும் இடைவிடாமல் காலை, மாலை இந்த மணிப்பூரக சக்கரா தியானத்தைச் செய்து பலனை அடையுங்கள்.